For Daily Alerts
Just In
காவிரி விவகாரம்: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து திமுக இன்று மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டம்
காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து திமுக தலைமையில் இன்று மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
Recommended Video
திமுக இன்று மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டம்
சென்னை: காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய திமுக தலைமையில் இன்று மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று திமுக உட்பட எதிர்க்கட்சிகள் பிரமாண்ட போராட்டத்தை நடத்தினர்.
இதில் பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்க இன்று திமுக தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் தொடர்பாக திமுக தலைமையில் இன்று மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
Comments
dmk all party meeting cauvery management board cauvery issue திமுக காவிரி மேலாண்மை வாரியம் காவிரி விவகாரம்
English summary
DMK working president Stalin has said that All party meeting will be conduct today on the next program of Cauvery issue. The meeting will be start in Arivalayam by 10.30 am.
Story first published: Friday, April 6, 2018, 9:31 [IST]