For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமாவாசையில் பித்ருகளின் ஆசி தரும் சூலினி துர்கா ஹோமம்

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சனிக்கிழமை அமாவாசை திதியை முன்னிட்டு காலை 10.30 மணிளவில் சூலினி துர்கா ஹோமம் நடைபெற உள்ளது.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

வேலூர்: வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் அமாவாசையை முன்னிட்டு கண் திருஷ்டி நீக்கும் சூலினி துர்கா ஹோமம் நடைபெற உள்ளது.

ஜோதிட சாஸ்திர, வான நட்சத்திர மண்டல விஞ்ஞானத்தின்படி சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்கள் சுழற்சி முறையில் ஒரே ராசியில் சேர்வதே அமாவாசை.

இந்நாளில் முன்னோர்கள், மூத்தோர்கள், இறந்த தாய், தந்தையரை நினைத்து வழிபாடு நடத்துவது இந்துக்களின் வழக்கம். இந்நாளில் நம் முன்னோர்களை நினைத்து நாம் செய்கிற பூஜை வழிபாடு, தர்ப்பணம், அன்னதானம் போன்றவற்றை ஏற்றுக்கொள்வதற்காக அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகமும், நம்பிக்கையும் உள்ளது.

பித்ருகளுக்கு ஹோமம்

பித்ருகளுக்கு ஹோமம்

அமாவாசையில் நடைபெறும் பூஜைகள் மற்றும் ஹோமத்தில் பங்கு கொள்வதால் சந்ததியினர் தோஷமில்லாமல் நலமுடன் வாழ வழி செய்கிறது. பித்ருக்களை நினைவுகூர்ந்து நாம் செய்யும் வழிபாடுகள், தர்ம காரியங்கள் ஆகியவை அந்த ஆத்மாக்களுக்கு மகிழ்வளிக்கும் செயலாகும். இதனால்,அவர்களது பரிபூரண ஆசி நமக்கும் நம் சந்ததிக்கும் கிடைக்கும். துர்மரணம், விபத்து, அகால மரணம் அடைந்தவர்கள் ஆத்மா சாந்தியடைந்து முக்தி கிடைக்கப் பெறுவர்கள்.

திருஷ்டி துர்கா ஹோமம்

திருஷ்டி துர்கா ஹோமம்

உலகத்தில் இன்றைக்கு இருக்கிற மோசமான வியாதிகளுள் ‘திருஷ்டி' எனப்படும் வியாதி மிக கொடூரமான ஒன்று. இந்த திருஷ்டியினால் தனிப்பட்ட நபரின் முன்னேற்றம் பாதித்தல், குடும்பத்தில் சச்சரவு ஏற்படுதல், தாம்பத்திய உறவில் விரிசல் ஏற்படுகிறது.

ஸ்ரீ ப்ரித்யங்கிரா ஹோமம்

ஸ்ரீ ப்ரித்யங்கிரா ஹோமம்

ஒவ்வொருவரும் தங்களுக்குள்ள திருஷ்டியை அமாவாசையில், தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் சூலினி துர்கா ஹோமம், ஸ்ரீ ப்ரித்யங்கிரா ஹோமம், சரப ஹோமம், திருஷ்டி துர்கா ஹோமம் போன்ற ஹோமங்களில் கலந்துகொண்டு ஏற்படும் திருஷ்டிகளை அவ்வப்போது கழித்துக் கட்டுவது நல்லது.

பித்ருக்களின் ஆசி கிடைக்கும்

பித்ருக்களின் ஆசி கிடைக்கும்

தொழில்களில் ஏற்படக் கூடிய தடைகள் அகலவும், பணப் பிரச்னை, கடன் பிரச்னை தீரவும், எதிரிகள் தொல்லை அகலவும், மரண பயம் நீங்கவும்,அகால மரணம் நிகழாமல் இருக்கவும், மாங்கல்ய தோஷம் அகலவும், பஞ்ச பூதங்களினால் ஏற்படும் இன்னல்கள் அகலவும் ஹோமங்கள் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடைபெற உள்ளது. இந்த யாகத்தில் பங்கு கொண்டு பித்ருக்களின் ஆசிகளையும், பெற தன்வந்திரி குடும்பத்தினர் அழைக்கின்றனர். தொலைபேசி : 04172-230033 / 09443330203

English summary
Shoolini Durga Homa Benefits of Negative effects will be minimized. Weak planets are strengthened. Disciplined mind, peace of mind. Quickness in action and result.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X