For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடிகர் ஆர்யா, இயக்குநர் பாலாவுக்கு அம்பை நீதிமன்றம் பிடி வாரண்ட்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    பிடிவாரன்டில் சிக்கிய நடிகர் ஆர்யா மற்றும் இயக்குனர் பாலா

    நெல்லை: நடிகர் ஆர்யா, இயக்குநர் பாலாவுக்கு அம்பாசமுத்திரம் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

    கல்போத்தி அகோரம் தயாரிப்பில், பாலா இயக்கத்தில் வெளியான 'அவன் இவன்' என்ற ஒரு திரைப்படத்தில், கதாநாயகனாக ஆர்யா நடித்திருந்தார்.

    Ambasamudram court issued warrant against Actor Arya, director Bala

    இத்திரைப்படத்தில் சிங்கம்பட்டி சமஸ்தானம் மற்றும் காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் ஆகியவை குறித்து அவதூறாக காட்சிகள் உள்ளதாக கூறி,
    2013ல் நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடரப்பட்டது.

    இவ்வழக்கில், 2 வாரங்களுக்கு முன்பு, ஆர்யா, பாலா, தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அவர்களின் மேலாளர் ஆகியோர் ஆஜராகினர். இந்த வழக்கு இம்மாதம் 22ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைக்கப்பட்டதோடு, அன்று, ஆர்யா, பாலா, தயாரிப்பாளர் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

    அன்றைய தேதியில் மூவருமே நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து நேற்று (வெள்ளிக்கிழமை) ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். எனினும், நேற்றும் மூவரும் ஆஜராகவில்லை.

    இதையடுத்து நீதிபதி முரளிதரன், ஜூலை 13ம் தேதி மூவரும் ஆஜராக வேண்டுமென்று பிடி வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

    English summary
    Ambasamudram court has issued warrant against Actor Arya, director Bala over Avan Ivan movie.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X