For Daily Alerts
Just In
உளுந்தூர்பேட்டையில் அரசு பேருந்து மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து.. போலீஸ் உட்பட இருவர் படுகாயம்
உளுந்தூர்பேட்டையில் அரசு பேருந்து மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
விழுப்புரம்: உளுந்தூர்பேட்டையில் அரசு பேருந்து மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த விபத்தில் ஆம்புலன்சில் இருந்த இருவருக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது.
உளுந்தூர்பேட்டை டோல்கேட் அருகே வேகமாக வந்த ஆம்புலன்ஸ் ஒன்று எதிரில் வந்த அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இதில் ஆம்புலன்சில் இருந்த டிரைவருக்கு மிக மோசமான காயம் ஏற்பட்டு இருக்கிறது.
விபத்துக்குள்ளான ஆம்புலன்சில் இருந்த ரிஷிவந்தியம் காவல் நிலைய போலீஸ் பாஸ்கரன் இதில் காயம் அடைந்து இருக்கிறார்.
தற்போது இவர்கள் இருவரும் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகு அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
பேருந்தில் பயணித்த யாருக்கும் இந்த விபத்தில் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
Comments
English summary
Ambulance and Government bus met accident in Villupuram. The Ambulance driver and Rishivanthiyam police officer Baskaran who is inside ambulance injured in the accident.
Story first published: Wednesday, December 20, 2017, 20:13 [IST]