எம்ஜிஆர் பெயரில் மக்களுக்கு இத்தனை தொல்லையா... அதிமுக விழாவில் சிக்கி தவித்த ஆம்புலன்ஸ்!
சென்னை: எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றதால் போக்குவரத்து நெரிசல் காரணமாக தேனாம்பேட்டையில் ஆம்புலன்ஸ் ஒன்று சிக்கித் தவித்தது.
சென்னை நந்தனம் அருகே உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க தமிழகம் முழுவதும் ஏராளமான அதிமுகவினர் தங்கள் வாகனங்களை எடுத்து கொண்டு நந்தனத்துக்கு வந்தனர்.
ஒரே நேரத்தில் இத்தனை வாகனங்கள் வந்ததாலும் நிறுத்த இடம் இன்றி ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தது. இதுமட்டுமல்லாமல் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முதல்வர், துணை முதல்வர், அதிமுக நிர்வாகிகளின் வாகனங்கள் என அப்பகுதியே வாகன நெரிசலால் ஸ்தம்பித்தது.
Harsh side effects of the non-essential MGR centenary celebrations.
— Pramod Madhav (@madhavpramod1) September 30, 2018
Ambulance gets stuck at ace stops road near Teynampet.
Smart citizens frown at the State Government and make for it.
Not a single cop visible. pic.twitter.com/4844w0okap
இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தேனாம்பேட்டை ஏஸ் சாலை அருகே நோயாளியை ஏற்றிக் கொண்டு வந்த ஆம்புலன்ஸ் வாகனம் நெரிசலில் சிக்கிக் கொண்டது.
அதை மீட்க அங்கு ஒரு போலீஸ்காரர் கூட இல்லாத நிலையில் பொதுமக்களே அந்த ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழியேற்படுத்திக் கொடுத்தது. அதோடு இது போல் மக்களை அலைக்கழிக்கும் விழாக்கள் தேவையா என அரசு மீது அவர்கள் கோபம் கொண்டனர்.