அம்மா உணவகம் மூலம் மக்கள் மனதில் வாழும் ஜெயலலிதா-வீடியோ
ஜெயலலிதா மறைந்து விட்டாலும் அவர் அறிமுகப்படுத்திய அம்மா உணவகங்கள் மூலம் அவர் மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறார்.
சென்னை: குறைந்த விலைக்கு உணவை வழங்கி ஏழை எளிய மக்களின் பசியை போக்கும் அம்மா உணவகங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஜெயலலிதா மறைந்து விட்டாலும் அவர் அறிமுகப்படுத்திய அம்மா உணவகங்கள் மூலம் மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மா உணவகங்களை அறிமுகம் செய்தார். குறைந்த விலையில் தரமான உணவு வழங்கப்படுவதால் ஏழை எளிய மக்கள் இடையே அம்மா உணவகம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும் பொங்கல் 5 ரூபாய்க்கும் சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும் தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் லெமன் சாதம் 5 ரூபாய்க்கும் கருவேப்பிலை சாதம் 5 ரூபாய்க்கும் 2 சப்பாத்திகள் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதில் வாகன ஓட்டுநர்கள் வெளியூரில் இருந்து வந்து வேலை பார்க்கும் தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த அம்மா உணவகங்கள் மூலம் பயனடைந்து வருகின்றன. ஏழை எளிய மக்களின் பசியாற ஜெயலலிதா உருவாக்கிய இந்த மலிவு விலை அம்மா உணவகங்கள் ஒவ்வொரு தேர்தல் முடிவிலும் பிரதிபலிக்கும் என்பது யாரும் மறுக்க முடியாத ஒன்று.