For Quick Alerts
For Daily Alerts
Just In
மாதவரம் பால் பண்ணையில் அமோனிய வாயு கசிவு.. கண் எரிச்சல் மூச்சுத்திணறலால் பொதுமக்கள் பாதிப்பு
மாதவரம் பால் பண்ணையில் ஏற்பட்ட வாயு கசிவால் அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
சென்னை: மாதவரம் பால் பண்ணையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் அப்பகுதி மக்கள் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனர்.
சென்னை மாதவரத்தில் அரசுக்கு சொந்தமான ஆவின் பால் பண்ணை இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பிற்பகல் பால் பண்ணையில் வைக்கப்பட்டிருந்த அமோனியா வாயு கசிந்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன.
இதனால் அப்பபகுதி மக்கள் பெரும் பதற்றமடைந்தனர். இதையடுத்து அமோனியா வாயுவை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
Comments
English summary
Amonia gas leaked in Madhavaram milk factory. Public affected with respiratory problems.
Story first published: Thursday, March 15, 2018, 16:07 [IST]