For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதாவின் சொத்துக்களை குறி வைத்தே அம்ருதா பொய் வழக்கு தொடர்ந்துள்ளார்.. ஹைகோர்ட்டில் தீபக் மனு!

ஜெயலலிதாவின் சொத்துக்களை குறி வைத்தே அம்ருதா பொய் வழக்கு தொடர்ந்துள்ளதாக தீபக் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதாவின் சொத்துக்களை குறி வைத்தே அம்ருதா பொய் வழக்கு தொடர்ந்துள்ளதாக தீபக் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண் தான்தான் ஜெயலலிதா பெற்றெடுத்த மகள் எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Amruta filed a case against only for Jayalalithaa's assets: Deepak

ஜெயலலிதாவின் வாரிசு தான்தான் என்பதை உறுதி செய்ய அவரது உடலை தோன்டியெடுத்து டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் ஜெயலலிதாவுக்கு சம்பிரதாயப்படி இறுதிச்சடங்கு செய்ய அனுமதிக்கக்கோரி அம்ருதா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில் ஜெயலலிதாவின் சொத்துக்களை குறி வைத்தே அம்ருதா பொய் வழக்கு தொடர்ந்துள்ளார் என தீபக் தெரிவித்துள்ளார். மேலும் தமது பாட்டி சந்தியாவுக்கு ஜெயக்குமார், ஜெயலலிதா மட்டுமே வாரிசுகள் என்றும் தீபக் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு ஷைலஜா என்ற சகோதரியே கிடையாது என்றும் தீபக் தெரிவித்துள்ளார்.

English summary
Deepak has filed a petition in Chennai High Court. Deepak said that Amruta had filed a case against only for Jayalalithaa's assets. Deepak also stated that Jayalalitha and Jayakumar were the heir to his grandmother Sandhya. Deepak said that Jayalalithaa does not have a sister named Shailaja.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X