ஏ.என்.32 மாயமான இடத்தில் 2 பொருட்கள் கண்டெடுப்பு: விமான பாகங்களா?
சென்னை: மாயமான ஏ.என். 32 ரக விமானத்தை தேடும்போது வங்கக் கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பொருட்கள் கிடைத்தன.
சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படைத்தளத்தில் இருந்து 29 பேருடன் அந்தமானுக்கு கிளம்பிய விமானப்படை விமானம் ஏ.என். 32 மாயமாகி 5 நாட்கள் ஆகிவிட்டது. விமானம் வங்கக் கடலில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அங்கு தேடும் பணி நடந்து வருகிறது.
விமானத்தை தேடும் பணியில் 13 கடற்படை கப்பல்கள், 2 கடலோர காவல்படை கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. ஆனால் இதுவரை விமானம் பற்றி ஒரு விபரமும் தெரியவில்லை. விமானத்தில் இருந்தவர்களின் நிலை தெரியாமல் அவர்களின் குடும்பத்தார் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் விமானத்தை தேடும் பகுதியில் 2 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆரஞ்சு நிறத்தில் இருந்த அவை விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆய்வில் அவை விமானத்தின் பாகங்கள் இல்லை என்பது தெரிய வந்தது.
இதையடுத்து விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.