சென்னையில் சொகுசு கார் மோதி முதியவர் பலி... டிரைவர் எஸ்கேப்
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த முதியவர் மீது சொகுசு கார் மோதியதில் அவர் உயிரிழந்தார்.
நியூ ஆவடி சாலையில் ரவி என்ற முதியவர் படுத்து உறங்கி கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த சொகுசு கார் ரவியின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை கார் டிரைவர் மருத்துவமனையில் சேர்த்தார்.
பின்னர் சிகிச்சை பலனின்றி ரவி உயிரிழந்தார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு செல்வதற்குள் டிரைவர் தப்பியோடி விட்டார். அவரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சொகுசு கார்கள், பைக் ரேஸ் உள்ளிட்டவற்றில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. ஆடி கார் ஐஸ்வர்யா தொடங்கி சௌந்தர்யா வரை சொகுசு கார் மூலம் விபத்துகளை ஏற்படுத்தியவர்கள் ஏராளம். இதேபோல் விலையுயர்ந்த பைக்குகள் மூலம் ரேஸ்களை நடத்தி இளைஞர்கள் பலர் பொதுமக்களின் உயிர்களுடன் விளையாடி வருகின்றனர்.
இதுபோன்று விபத்து ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோள். சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் மட்டுமே குற்றங்கள் குறையும் என்பது நிதர்சனம்.