"நான் நலமுடன் இருக்கிறேன்" வதந்திகளை நம்ப வேண்டாம் - நடிகர் ஆனந்தராஜ்
சென்னை: நான் நலமுடன் இருக்கிறேன் என்னை பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் என்று வில்லன் நடிகர் ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார்.
பாட்ஷா, சூர்ய வம்சம், நாட்டாமை, சிம்மராசி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரபல வில்லன் நடிகர் ஆனந்தராஜ். புதுச்சேரியை பூர்விகமாகக் கொண்ட இவர், எம்ஜிஆர் அரசு திரைப்படக் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார்.
தற்போது ஆனந்தராஜ் அதிமுகவில் நட்சத்திர பேச்சாளராக உள்ளார். நேற்று பிற்பகலில் திடீரென அவரது உடல்நிலை குறித்த வதந்தி ஒன்று சமூக வலைத்தளங்கில் பரவியது. மாரடைப்பு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவியது. இந்த தகவல் திரையுலகம் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது.
பல திரையுலக பிரபலங்கள் ஆனந்தராஜ் பற்றிய தகவலை நம்பி அவரது குடும்பத்தினரிடம் துக்கம் விசாரிக்கத்துவங்கி விட்டனர். பின்புதான் அது வதந்தி எனத் தெரியவந்தது. இதனையடுத்து தன்னைப்பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் தான் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் வரும் சட்டசபை தேர்தலில் அதிமுகவிற்காக கிராமம் தோறும் பிரச்சாரம் மேற்கொண்டு மக்களை விரைவில் சந்திப்பேன். இந்த தவறான செய்தியை யாரும் நம்பவேண்டாம். இதனால் கடவுள் எனக்கு நீண்ட ஆயுளை தருவார் என நம்புகிறேன். இவ்வாறு ஆனந்தராஜ் கூறியுள்ளார்.