For Daily Alerts
Just In
வேலூரிலிருந்து ஆந்திரா செல்லும் பஸ்கள் நிறுத்தம்.. பயணிகள் அவதி
வேலூர்: திருப்பதி வனப்பகுதியில், செம்மரக்கட்டை வெட்டியவர்கள் மீது ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 20பேர் கொல்லப்பட்டதையடுத்து, வேலூரிலிருந்து திருத்தணி செல்லும் பஸ்சை நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தமிழக வாழ்வு உரிமை கட்சியினர் சிறை பிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலூர் புதிய பஸ் ஸ்டாண்டில், ஆந்திர பஸ் டிப்போ அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர். இதனால், வேலூரிலுள்ள ஆந்திராவின் பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படும் 300 பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதனால் சித்தூர், திருப்பதி போன்ற ஆந்திர நகரங்களுக்கு செல்ல வேண்டிய பயணிகள் அவதிப்பட்டனர்.
இன்று முழுவதும், பஸ்கள் இயக்கப்படாது என்று தெரிகிறது.
English summary
Andhra bound buses from Vellore stopped after stone pelting incidents reported, in the backdrop of Andhra police encounter.