கருணாநிதியைப் பார்க்க வந்த ஆந்திர அமைச்சர்.. தமிழர்கள் கைது குறித்து பதிலளிக்க மறுப்பு!
சென்னை: முக தலைவர் கருணாநிதி பார்க்க வந்த ஆந்திர மாநில கல்வித்துறை அமைச்சர் கண்டா சீனிவாசராவ், தமிழர்கள் கைது, பாலாறு தடுப்பணை விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கு மறுத்து விட்டுப் போய் விட்டார்.
இன்று திடீரென சீனிவாசராவ் சென்னை வந்தார். நேராக திமுக தலைவர் கருணாநிதியைப் போய்ப் பார்த்தார். பின்னர் விமான நிலையம் திரும்பினார். அங்கு வைத்து செய்தியாளர்கள் அவரிடம், ஆந்திர அரசால் 32 தமிழர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் பற்றி அவரிடம் கேள்வி கேட்டனர்.
பெரும் திரளாக கூடியிருந்த செய்தியார்கள் இதுகுறித்து கேட்டபோது, செம்மரக் கடத்தல் விவகாரமா என்று திரும்பக் கேட்ட ராவ், அதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்தான் பதிலளிக்க முடியும். அவரிடம்தான் நீங்கள் கேட்க முடியும். உங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாது என்று கூறினார்.
பாலாறு ஆற்றின் குறுக்கே ஆந்திரா தடுப்பணை கட்டும் விவகாரம் குறித்த கேள்விக்கும் ராவ் பதிலளிக்க மறுத்து விட்டு பேசாமல் போய் விட்டார்.