"பொறியியல் மாணவர்களுக்கான இரண்டு நாள் வேலை வாய்ப்பு முகாம்" அண்ணா பல்கலைக்கழகம்
சென்னை: மாநில அளவில் வேலைவாய்ப்பு முகாமை அண்ணா பல்கலைகழகம் இன்றும், நாளையும் நடத்துகிறது
பொறியியல் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களில் விடுபட்டுப் போனவர்களுக்காக மார்ச் 7,8 ஆகிய இரண்டு தேதிகளில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் கடந்த 2013 டிசம்பர், 2014 ஜனவரி மாதங்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
இதில் இணைப்புக் கல்லூரிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
இந்த நிலையில், பல்வேறு காரணங்களால் இந்த வேலைவாய்ப்பு முகாம்களில் பங்கேற்க முடியாமல் போன மாணவர்களுக்காக மீண்டும் மார்ச் 7 மற்றும் 8 தேதிகளில் மீண்டும் ஒரு வேலைவாய்ப்பு முகாமை பல்கலைக்கழகம் நடத்துகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பிரதியுஷா தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனத்தில் இந்த முகாம் நடத்தப்பட உள்ளது.
இதில் இன்ஃபோசிஸ் நிறுவனம் பங்கேற்று மாணவர்களைத் தெரிவு செய்யவுள்ளது.
இதற்காக பல்கலைக்கழகத்தின் இணைய தளம் மூலம் மாணவர்கள் பதிவு செய்து நுழைவுச் சீட்டை பெற்றுக் கொள்ள வேண்டும். நுழைவுச் சீட்டு உள்ளவர்கள் மட்டுமே வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று ஆன்-லைன் தேர்வை எழுத முடியும்.