நிதிச் சிக்கலை தீர்க்க வேண்டும்.. அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தீர்மானம்
நிதிச் சிக்கலை தீர்க்க, அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர் ஊழியர் சங்க ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சென்னை: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இது குறித்து ஆசிரியர் ஊழியர் சங்க ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. இதில் பல்வேறு விவாதங்கள் எதிரொலித்தன. இறுதியில், பல்கலைக்கழகத்தின் நொதி நிலைமை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட அரசிடம் கோரிக்கை வைப்பது என நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானித்தனர்.
நிதிச் சிக்கலை தீர்க்கவும், பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கும் முன்னாள் நீதிபதிகள், துணைவேந்தர்கள், கல்வியாளர்கள் அடங்கிய மேலாண்மை குழுவை தமிழக அரசு நியமிக்க வலியுறுத்தியும், தணிக்கை அறிக்கையை காரணம் காட்டி சம்பள குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
6 ஆண்டுகளாக ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள பணப் பயன்கள்,பதவி உயர்வுகளை வழங்கிடவும், பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு மற்றும் கல்விக் குழுவுக்கு உடனே தேர்தலை நடத்தவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.