தஞ்சையில் தொழிலதிபரை துடிக்க துடிக்க அரிவாள் வெட்டு.. மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
Recommended Video
தஞ்சை: தஞ்சையில் தொழிலதிபரை துடிக்க துடிக்க அரிவாளால் வெட்டி விட்டு தப்பிய 4 பேர் கொண்ட கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள அபி & அபி மோட்டார் ஷோரூம் முதலாளி இளங்கோவன் (62). இன்று அதிகாலை ஷோரூமில் போர்வெல் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதை பார்வையிட தனது நிறுவனத்திற்கு வந்திருந்தார்.
பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை முதலில் கட்டையால் தாக்கி பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டியதால் கீழே மயக்கமடைந்து விழுந்தார்.
பின்னர் ஷோ ரூமில் வேலை பார்க்கும் பணியாளர்களும் மற்றும் அக்கம்பக்கத்தினரும் கூச்சலிட்டதால் 4 பேர் கொண்ட கும்பல் அந்த இடத்தை விட்டு தப்பியது. பின்னர் மருத்துவக் கல்லூரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமா இல்லை குடும்ப பிரச்சனையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காயமடைந்த இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.