For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அண்ணாமலை பல்கலையில் முறைகேடு புகார்... லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை!

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சிதம்பரம் : பல்கலைக்கழகத்தில் முறைகேடுகள் நடப்பதாக பல்வேறு புகார்கள் வந்த நிலையில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் நியமனத்தில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக நீண்ட காலமாக புகார் இருந்தது. இதனையடுத்து பல்கலைக்கழகத்தை அரசு தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.

Anti vigilance team raids at Chidambaram annamalai university

இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் மீண்டும் முறைகேடுகள் நடப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு பல புகார்கள் வந்துள்ளனர். இதனையடுத்து
கடலூர் லஞ்சஒழிப்புத் துறை ஆய்வாளர் சதீஷ் தலைமையில் 5 பேர் பல்கலைக்கழகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதிகாரிகளின் திடீர் சோதனையால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

English summary
Anti vigilance team raids at Chidambaram annamalai university after complaints received from many looting money for postings of lecturers
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X