For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன்.. இன்று யாரெல்லாம் ஆஜரானாங்கன்னு தெரியுமா?

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர்கள் இன்று ஆஜராகினர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா மரண விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர்கள் இன்று ஆஜராகினர்.

ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு உடல்நிலை குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 75 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Apollo doctors appear before Arumugasamy Commission

இந்த மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இதையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷனை தமிழக அரசு நியமித்தது. கடந்த நவம்பர் மாதம் முதல் தனது விசாரணையை ஆறுமுகசாமி தொடங்கினார்.

இதுவரை 20-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினார். ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சசிகலாவின் உறவினரும் மருத்துவருமான சிவகுமார், முன்னாள், இன்னாள் அரசு அதிகாரிகள், வங்கி முன்னாள் அதிகாரி மகாலட்சுமி, அப்பல்லோ செவிலியர், அப்பல்லோ மருத்துவர்கள் ஜெயஸ்ரீ, சாந்தாராம் உள்ளிட்டோர் ஏற்கெனவே ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில் அப்பல்லோ மருத்துவர் ஷில்பா, அந்த மருத்துவமனையின் செவிலியர் ஹெலனா உள்ளிட்டோர் இன்று ஆஜராகினர்.

English summary
Apollo doctors appear before Arumugasamy Commissio in the Jayalalitha death case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X