ஜெ.வுக்கு அளித்த சிகிச்சை என்ன?.. 2 பெட்டி நிறைய ஆவணங்களுடன் வந்த அப்பல்லோ குழு!
ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சைகள் தொடர்பான ஆவணங்களை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஆறுமுகசாமி கமிஷனில் தாக்கல் செய்துள்ளது.
சென்னை: ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சைகள் தொடர்பான ஆவணங்களை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஆறுமுகசாமி கமிஷனில் தாக்கல் செய்துள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டதை தொடர்ந்து ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை
இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு ஆறுமுகசாமி கமிஷன் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திற்கு சம்மன் அனுப்பியது.
ஆவணங்களை தாக்கல் செய்ய
இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு ஆறுமுகசாமி கமிஷன் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திற்கு சம்மன் அனுப்பியது.
2 பெட்டிகளில் ஆவணங்கள்
இதத்தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பான ஆவணங்களை அப்பல்லோ நிர்வாகம் ஆறுமுகசாமி கமிஷனில் தாக்கல் செய்துள்ளது. 2 பெட்டிகளில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சுவாமிநாதன் ஆஜர்
இதனிடையே ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர் சுவாமிநாதன் ஆஜராகியுள்ளார். ஜெயலலிதாவிற்கு இதயம் செயலிழந்த போது அவருக்கு சிகிச்சை அளித்தவர் மருத்துவர் சுவாமிநாதன் ஆவர்.
ஆறுமுகசாமி விசாரணை
சென்னை எழிலகத்தில் உள்ள ஆறுமுகசாமி அலுவலகத்தில் ஆஜராகியுள்ள அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டிக்கும் ஆறுமுகசாமி கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.