தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்கியது
மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்கியது.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்குகிறது.
85 சதவீத இடங்களுக்கு தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. இந்த படிப்பில் சேர விண்ணப்பங்கள் இன்று முதல் அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் அரசு பல் மருத்துவ கல்லூரியிலும் வழங்கப்படுகிறது. காலை 10 மணி முதல் வரும் 18ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் பெற கடைசி நாள் 18-ந்தேதி எனவும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செயலாளர், மருத்துவ தேர்வுக்குழு இயக்ககம், பெரியார் ஈ.வே,ராநெடுஞ்சாலை, கீழ்பாக்கம், சென்னை-10 என்ற முகவரிக்கு வருகிற 19-ந்தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்தபிறகு தரவரிசை பட்டியல் 28-ந்தேதி வெளியிடப்படும் என்றும், முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.