அரியலூர் சாலை விபத்து: உயிரிழந்த 14 பேர் குடும்பத்துக்கு தலா. ரூ. 1 லட்சம் ஜெ., நிதியுதவி
சென்னை: அரியலூர் சாலை விபத்தில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் தர முதல்வர் ஜெயலலிதா உத்தரவு அளித்துள்ளார். அரியலூர் சாலை விபத்தில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம்,ஜெயங்கொண்டம் அருகே கச்சிப்பெருமாள் கிராமத்தில் லாரியும் சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பும்போது இந்த கோர விபத்து நடந்துள்ளது.
இதில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரழந்த நிலையில், மீட்கப்பட்ட பலர் அருகில் உள்ள ஜெயங்கொண்டம், தஞ்சாவூர், அரியலூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது வரை 14 ஆக உயர்ந்துள்ளது.
ஜெயலலிதா நிதி உதவி
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அறிக்கை. pic.twitter.com/7wCBl34c0I
— AIADMK (@AIADMKOfficial) September 26, 2016
இவ்விபத்தில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் தர முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் முதல்வர் தெரிவித்துள்ளார். காயமடைந்த 11 பேருக்கு நல்ல சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
Puratchi Thalaivi Amma grants Rs.1L aid to kin of 14 persons killed in road mishap in Ariyalur District & Rs.50,000 to seriously injured.
— AIADMK (@AIADMKOfficial) September 26, 2016
விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 மற்றும் லேசான காயம் ஏற்பட்டவர்களுக்கு ரூ.25,000 வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.