For Daily Alerts
Just In
ரஜினி அரசியலுக்கு வர வேண்டும்.. அர்ஜுன் சம்பத் ஆசை
ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார். இறைச்சி தடை சட்டத்தை அவர் வரவேற்றுள்ளார்.
கன்னியாகுமரி: அரசியலுக்கு நடிகர் ரஜினிகாந்த் வர வேண்டும் என்று நாகர்கோவிலில் இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுன் சம்பத், மத்திய அரசு மாடுகள் வெட்டுவதற்கு கொண்டு வந்துள்ள தடையை வரவேற்றார். மேலும் மாடுகள் வெட்ட தடையை விமர்சிப்பதன் மூலமாக ஸ்டாலின் மதகலவரத்தை தூண்ட முயற்சிக்கிறார் என்று குற்றம்சாட்டினார்.
ஸ்டாலின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய அர்ஜுன் சம்பத், ஜூலை போராட்டம் மூலமாக பொன். ராதாகிருஷ்ணன் லாபம் அடைந்தார். ஆனால் ஒரு ஏழை ஹிந்து மாணவர்களுக்கும் கல்வி உதவி தொகை வழங்கபட வில்லை என்றார்.
ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
Comments
English summary
Actor Rajinikanth should come to politics, said, Arjun Sampath in Kanyakumari.
Story first published: Saturday, May 27, 2017, 15:43 [IST]