For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பக்கத்துல புதுபொண்டாட்டி.. மாலையும், கழுத்துமா புருஷன்.. ஸ்டெல்லாக்கு வந்ததே ஆத்திரம்.. கச்சேரிதான்!

மனைவிக்கு தெரியாமல் கல்யாணம் செய்த கணவன் கைது செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

Recommended Video

    முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்த ராணுவ வீரர்-வீடியோ

    கும்பகோணம்: புது பொண்டாட்டியுடன் மாலையும் கழுத்துமாக கணவனை பார்த்ததும் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது முதல் பொண்டாட்டி ஸ்டெல்லாவுக்கு!

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே மதனத்தூரை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். 48 வயசாகிறது. இவர் ஒரு ராணுவ சுபேதார். இவருக்கு 22 வருஷங்களுக்கு முன்பு கல்யாணம் ஆகிவிட்டது. மகாராஷ்டிராவில் தன் சொந்தக்கார பெண் ஸ்டெல்லாராணியைதான் கல்யாணம் செய்துள்ளார். ஸ்டெல்லாவுக்கு இப்போ வயசு 41!

    காலேஜ் படிக்கிற ஒரு மகனும், பிளஸ் டூ படிக்கிற ஒரு மகனும் என 2 பேர் இருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே தகராறு வந்தது. அதனால் ஸ்டெல்லா கோபித்து கொண்டு, மகன்களை கூப்பிட்டு கொண்டு தன் அம்மா வீட்டுக்கு வந்து விட்டார்.

    நண்பனை நம்பி போன சிறுமி... 5 பேருக்கு விருந்தாக்கிய கொடூரன் - ஆந்திராவில் பயங்கரம்நண்பனை நம்பி போன சிறுமி... 5 பேருக்கு விருந்தாக்கிய கொடூரன் - ஆந்திராவில் பயங்கரம்

    சுபாஷ்

    சுபாஷ்

    இந்த சமயத்தில்தான் இன்னொரு கல்யாணத்துக்கு ஆசைப்பட்டார் சுபாஷ். இதற்காக மேட்ரிமோனியலில் பெண்ணை தேடினார். முதல்ல நடந்த ஒரு கல்யாணம், பொண்டாட்டி, 2 பிள்ளைகள் இந்த விஷயம் எதையுமே சொல்லாமல், வரனை தேடினார்.

    கல்யாணம்

    கல்யாணம்

    அதன்படி மதுரையை சேர்ந்த ஒரு பெண்ணை சுபாஷூக்கு பிடித்துவிட்டது. அந்த பெண்ணின் பெயர் நித்யா. வயசு 35. பெண் முடிவான உடனேயே, கொஞ்சமும் தாமதிக்காமல் கல்யாணம் செய்ய முடிவு பண்ணினார் சுபாஷ். நேத்துதான் கல்யாணம்.. கும்பகோணம் பக்கத்தில உள்ள சுவாமிமலை முருகன் கோயிலில் தாலி கட்டினார்.

    சுவாமி மலை

    சுவாமி மலை

    இங்கதான் ஒரு ட்விஸ்ட்... தஞ்சாவூரில் இருக்கிற கோயில்களை சுற்ற பார்க்க ஸ்டெல்லா மகனுடன் ஊருக்கு வந்திக்கிறார். அப்படித்தான் நேற்று சுவாமிமலையில் சாமி தரிசனம் செய்தவர், திடீரென மாலையும் கழுத்துமாக சுபாஷ் நின்ற தரிசனத்தையும் பார்த்துவிட்டார்.

    கைது

    கைது

    புது பொண்டாட்டி பக்கத்தில் நிற்க, மாப்பிள்ளை சுபாஷ் வாயெல்லாம் பல்லாக சிரித்து கொண்டிருந்தார். எதிரே வந்து நின்ற முதல் மனைவியை பார்த்ததும், வெலவெலத்து போனார். என்ன செய்வதென்றே தெரியாமல் அப்படியே சிலை போல நின்று கொண்டிருக்க, ஸ்டெல்லா நேராக போலீசுக்கு போய்விட்டார். புருஷன் செய்த காரியத்தை சொல்லவும், போலீசார் சுபாஷை கைது செய்து மாமியார் வீட்டுக்கு அழைத்து போனார்கள்.

    English summary
    58 year old Man got another marriage in temple and arrested by Kumbakonam Police
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X