வீரமரணமடைந்த ராணுவ வீரர் இளையராஜாவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் - வீடியோ
காஷ்மீரில் வீர மரணமடைந்த ராணுவ வீரர் இளயராஜாவின் உடல் அவரது சொந்த ஊரான கண்டனிக்கு கொண்டு வரப்பட்டு முழு அரசு மரியதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சிவகங்கை: காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் இளையராஜாவின் உடல் அவரது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யபப்ட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் தெற்கு காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப் பணியில் இருந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் இளையராஜா கடந்த 12ஆம் தேதி வீரமரணமடைந்தார்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் கண்டனி கிராமத்தை சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன் இளையராஜா 19வது மகாரெஜிமெண்ட் படைப்பிரிவில் ராணுவ வீரராக சேவையாற்றி வந்தார்.
இந்நிலையில் அவரது உடல் சொந்த ஊரான கண்டனிக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ராணுவ வீரர் இளையராஜாவின் முழு ராணுவ மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
இளையராஜாவின் மனைவி நான்கு மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பதுதான் சோகம். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அக்குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.