For Daily Alerts
Just In
சட்டசபை கதவுகளை மூடி விட்டு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு
சென்னை: தமிழக சட்டசபையின் கூட்டம் இன்று நடந்தபோது கதவுகள் அனைத்தையும் மூடி விட்டு வாக்கெடுப்பை நடத்தினர்.
தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் இன்று கூட்டப்பட்டிருந்தது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கு கோரினார். சபை கூடியதும், எதற்காக அது கூட்டப்பட்டுள்ளது என்பதை சபாநாயகர் தனபால் அறிவித்தார். பின்னர் முதல்வர் தீர்மானத்தைக் கொண்டு வந்து பேசினார்.
அதன் பின்னர் அவைக் கதவுகள் மூடப்பட்டு 6 பிரிவாக எம்.எல்.ஏக்களிடம் ஓட்டெடுப்பு நடைபெற்றது. காலை 11.30 மணிக்கு ஓட்டெடுப்பு நடைபெற்றது. கதவுகளை அடைத்து விட்டு வாக்கெடுப்பு நடந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.
Comments
tamil nadu assembly vote of confidence edappadi palanisamy admk தமிழக சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பு எடப்பாடி பழனிச்சாமி அதிமுக
English summary
Assembly doors will be shut during the voting in vote of confidence in the assembly today.