For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீங்கள் ஒருவர் மட்டுமாவது விசுவாசமாக இருங்கள் என்று கூறிய ஜெயலலிதா.. ஓபிஎஸ் உருக்கம்!

நீங்கள் ஒருவர் மட்டுமாவது விசுவாசமாக இருங்கள் என ஜெயலலிதா தன்னிடம் கூறியதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    நீங்களாவது விசுவாசமாக இருங்கள், பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை வைத்த ஜெயலலிதா- வீடியோ

    தேனி: நீங்கள் ஒருவர் மட்டுமாவது விசுவாசமாக இருங்கள் என ஜெயலலிதா தன்னிடம் கூறியதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

    சசிகலா குடும்பத்திற்கு எதிராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் மேற்கொண்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது.

    இந்நிலையில் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியில் நடைபெற்றது.

    சசி குடும்பம் மீது குற்றாச்சாட்டு

    சசி குடும்பம் மீது குற்றாச்சாட்டு

    இந்தக்கூட்டத்தில் அதிமுக பொருளாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலா குடும்பத்தினர் மீது பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார்.

    அடிக்கடி கேட்பார்

    அடிக்கடி கேட்பார்

    ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்டவர் டிடிவி தினகரன் என்ற அவர், தினகரனுடன் பேசக்கூடாது என ஜெயலலிதா தன்னிடம் கூறியதாக தெரிவித்தார். மேலும் தன்னிடம் அடிக்கடி தினகரனுடன் தொடர்பில் உள்ளீர்களா என்றும் ஜெயலலிதா கேட்பார் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

    விசுவாசமாக இருங்கள்

    விசுவாசமாக இருங்கள்

    தான் தினகரனுடன் பேசுவதில்லை என்று கூறியவுடன் நீங்கள் ஒருவராவது விசுவாசமாக இருங்கள் என ஜெயலலிதா கூறியதாகவும் அவர் தெரிவித்தார். தான் உயிருடன் இருக்கும் வரை தினகரன் வீட்டிற்குள் நுழைய விடமாட்டேன் என்றும் ஜெயலலிதா கூறியதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

    ஜெ.வுக்கு விசுவாசம்

    ஜெ.வுக்கு விசுவாசம்

    ஜெயலலிதா ஏன் அவ்வாறு கூறினார் என்று தனக்கு தெரியவில்லை என்ற ஓபிஎஸ் இதுகுறித்து ஜெயலலிதாவிடம் தன்னால் விளக்கம் கேட்க முடியாது என்றும் அவர் கூறினார். மேலும் ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்த ஒரே காரணத்திற்காகவே சசிகலா குடும்பம் தன்னை துரோகி என்றதாகவும் அவர் கூறினார்.

    மீண்டும் பரபரப்பு

    மீண்டும் பரபரப்பு

    தர்மயுத்தம் மேற்கொண்ட போது சசிகலா குடும்பத்தினர் தன்னை மிரட்டி ராஜினாமா கடிதத்தை பெற்றதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார் ஓ.பன்னீர்செல்வம். இது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் சசிகலா குடும்பத்தினர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டுகளை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Deputy Chief Minister O Paneerselvam accusing Sasikala family in Theni party meeting. He has said, if there were someone else would have committed suicide OPS said. Atleast you one be loyal to me Jayalalitha said this to OPS
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X