தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை தாக்க முயற்சி- ஒருவர் கைது
காஞ்சிபுரம் சிங்கப்பெருமாள்கோயிலில் தமிழிசை மீது தாக்குதல் முயற்சி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
Recommended Video
காஞ்சிபுரம்: சென்னை அருகே சிங்கபெருமாள்கோவிலில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை தாக்க முயற்சித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பெருமாள்கோயிலில் பாஜக சார்பில் பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்து பேசி கொண்டிருந்தார். அந்த சமயம் மேடை ஏறி வந்த ஒருவர் நபர் தமிழிசையை தாக்குதல் நடத்தும் எண்ணத்துடன் வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவரை கட்சியினர் தடுத்து நிறுத்தினர். மேலும் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாரும் அவரை மடக்கி பிடித்தனர். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து தமிழிசை கூறுகையில் நான் எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்து பேசி கொண்டிருந்த போது என்னை தாக்கும் நோக்கில் ஒருவர் வந்தார். அவர் படியேறி மேடைக்கு வரும் வரை போலீஸார் தடுக்கவில்லை.
எனவே இதுபோன்ற பொதுக் கூட்டங்களில் பேசுவோருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.