For Daily Alerts
Just In
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
திருவண்ணாமலையிலுள்ள புகழ் பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு கிரிவலம் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்மாமலையில் கிரிவலம் செல்கிறார்கள்.
இந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி வரும் வியாழக்கிழமை 12ம்தேதி பகல் 11.49 மணிக்கு பவுர்ணமி தொடங்குகிறது. 13ம்தேதி வெள்ளிக்கிழமை பகல் 10.08 மணிவரை பவுர்ணமி உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்தது.
Comments
English summary
The full moon day when devotees worship the almighty as the form of Girivalam in Tiruvannamalai Arunachaleswarar temple, will start at 11.49 am on Thursday, Temple administration announced.
Story first published: Tuesday, June 10, 2014, 8:59 [IST]