மதுவால் ஒரு கொலை... டாஸ்மாக் பாரில் தகராறு - ஆட்டோ ஓட்டுனரை பாட்டிலால் குத்திய காவலர்
நெல்லை: நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே டாஸ்மாக் பாரில் நடந்த தகராறில் ஆட்டோ டிரைவரை போலீஸ்காரர் கத்தியால் குத்திக் கொன்றார்.
ஆலங்குளம் அருகேயுள்ள மருதகுளம் பகுதியை சார்ந்தவர் சண்முக சுந்தரம். இவர் சுரண்டை காவல் நிலையத்தில் காவலராகவும், ஜீப் ஓட்டுனராகவும் பணியாற்றுகிறா்.
ஆலங்குளம் -ஊத்துமலை செல்லும் பாதையில் உள்ள நாச்சியார்புரம் விலக்கு பகுதியிலுள்ள ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. அந்த கடைக்கு பார் கிடையாது. ஆனாலும் அப்பகுதியில் உள்ள ஒருவர் சின்ன தகர செட் போட்டு குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றை வைத்து மினி பார் நடத்தி வருகிறார்.
அந்த பகுதிக்கு காவலர் சண்முகசுந்தரம் மது அருந்த சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு நெட்டூர் பகுதியை சார்ந்த ஆட்டோ ஓட்டுனர் இசக்கிமுத்து என்பவரும் இருந்ததாக கூறப்படுகிறது. இருவருக்குள்ளும் ஏதோ வாய்த்தகராறு ஏற்ப்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் காவலர் சண்முகசுந்தரம் ஆட்டோ ஓட்டுனர் இசக்கிமுத்துவை மது பாட்டிலால் குத்தியுள்ளார். இதில் இசக்கிமுத்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து காவலர் சண்முகசுந்தரம் ஆலங்குளம் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்தார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.