தமிழக மக்கள் அதிர்ஷ்டசாலிகள்... ஒரு ஓட்டுக்கு 3 முதல்வர்கள்... அழகிரி மகன் கிண்டல்
சசிகலா தமிழக முதல்வராக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அழகிரியின் மகன் தயா அழகிரி டிவிட்டரில் அதனை கிண்டல் செய்துள்ளார்.
சென்னை: சசிகலா முதல்வராவது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அழகிரியின் மகன் தயா அழகிரி தமிழக மக்கள் அதிர்ஷ்டசாலிகள். ஒரு ஓட்டுக்கு 3 முதல்வர்களை பார்த்துள்ளனர் என கிண்டல் செய்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் நேற்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டசபைக்குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து வரும் 9ஆம் தேதிக்குள் சசிகலா முதல்வராக பதவியேற்க உள்ளார்.
சசிகலா முதல்வராக பதவியேற்பதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதிமுகவின் இந்த முடிவு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
the people of TN are so lucky in one way.. you just have to cast your vote once and you get to see three Chief Ministers.. WHATTE WAAAWWW !
— Dhaya Alagiri (@dhayaalagiri) February 5, 2017
இந்நிலையில் இதுகுறித்து அழகிரியின் மகன் தயா அழகிரி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் தமிழக மக்கள் ஒரு வழியில் அதிர்ஷ்டசாலிகள்தான். ஒரே ஒரு வாக்களித்துவிட்டு 3 முதல்வர்களை பார்த்துள்ளனர் என அவர் கிண்டல் செய்துள்ளார்.