அழகிரிக்காக கருணாநிதியிடம் தூது போய் டோஸ் வாங்கிய கே.பி. ராமலிங்கம்
தேர்தல் பிரசாரத்துக்காக ஏப்ரல் 7-ந் தேதி ஈரோடு சென்றார் திமுக தலைவர் கருணாநிதி. அங்கு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் லீ ஜார்டின் என்ற ஹோட்டலில் தங்கியிருந்தார்.
அப்போது கருணாநிதியை மு.க.அழகிரியின் ஆதரவாளர் கே.பி.ராமலிங்கம் எம்.பி. சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, மு.க.அழகிரி தவறு ஒன்றும் செய்யவில்லை. அதனால் அவரையும், அவரது ஆதரவாளர்களையும் உடனே சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கே.பி.ராமலிங்கம் கூறினாராம்.
இதில் கடுப்பாகிப் போன கருணாநிதி, கட்சியை அழிக்க நினைக்கும் வைகோவுடன் இணைந்து செயல்படுவது துரோகமில்லையா என்று கோபமாக பேசியிருக்கிறார்.
அத்துடன் மு.க. அழகிரியுடன் சேர்ந்து செயல்படும் உன்னையும் (கே.பி.ராமலிங்கத்தையும்) கட்சியை விட்டே நீக்கிவிடுவேன் என்றும் கருணாநிதி எச்சரித்திருக்கிறார். இதனால் நொந்து போய் டோஸ் மட்டும் வாங்கிய கையோடு நடையைக் கட்டியிருக்கிறார் கே.பி. ராமலிங்கம்.