ஆர்.கே. நகரில் மதுசூதனனுக்கு நூதன முறையில் வாக்கு கேட்கும் அழகு தமிழ் செல்வி
நமது சின்னம் இரட்டை விளக்கு என்று மூச்சு விடாமல் பேசி ஓபிஎஸ் அணிக்கு வாக்கு சேகரிக்கிறார் அழகு தமிழ் செல்வி.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் போட்டியிடும் மதுசூதனனை ஆதரித்து பிரச்சாரம் களைகட்டியுள்ளது. நமது சின்னம் இரட்டை விளக்கு சத்தமா சொல்லுங்க என்று மூச்சு விடாமல் பிரச்சாரம் செய்தார்.
ஜெயலலிதா மறைந்தததையடுத்து சென்னை ஆர்.கே.நகரில் வரும் 12 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக சார்பில் மருது கணேஷ், சசிகலா அணியின் சார்பில்
டி.டி.வி.தினகரன், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
சசிகலா மற்றும் ஓபிஎஸ் அணிகளுக்கிடையே நடைபெற்ற மோதலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் தினகனுக்கு தொப்பி சின்னமும், மதுசூதனனுக்கு இரட்டை மின் விளக்கு கம்பம் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் ஓபிஎஸ் அணியை சேர்ந்த மதுசூதனன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். ஆர் கே நகர் தொகுதிக்கு உட்பட்ட புதுவண்ணாரப்பேட்டை ஜீவா நகர் , சிவன் நகர், மங்கம்மாள் தோட்டம், உட்பட்ட தெருக்களில் பொது மக்களை மதுசூதனன் சந்தித்தார். பின்னர் வீடு வீடாக சென்று பெண்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், தனக்கு ஒதுக்கப்பட்ட இரட்டை மின் விளக்கு சின்னத்தில் வாக்கு அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், அழகு தமிழ் செல்வி ஆகியோர் ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்கு சேகரித்தனர். தேர்தலில், ஒவ்வொரு வார்டுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு புதிய வியூகங்கள் அமைத்து புதுமையான முறையில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
சிங்கப்பூர் குடிமகன் என்று கூறிய டிடிவி தினகரன் தற்போது ஆர்.கே.நகரில் போட்டியிடுவது ஏன் என்று அழகு தமிழ் செல்வி கேள்வி எழுப்பினார். எங்கே நமது சின்னம் இரட்டை விளக்கு சத்தமா சொல்லுங்க என்று மூச்சு விடாமல் பிரச்சாரம் செய்தார். அவர் வேகமாக சொல்வது வாக்காளர்கள் காதில் இரட்டை இலை என்றே கேட்கிறது.