சென்னை, மதுரை பல்கலைக்கழகங்களின் புதிய துணைவேந்தர்கள்.. பரபர தகவல்கள்!
சென்னை மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகங்களுக்கு நியமிக்கப்பட்ட புதிய துணைவேந்தர்கள் குறித்த பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக துரைசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லதுரை நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய துணைவேந்தர்கள் குறித்த பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாகவும்,மதுரை காமராஜர் பலகலைக்கழகத்திற்கு இரண்டாண்டுக்கு மேலாகவும் துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டாமல் இருந்தது. இந்தநிலையில் இந்த இரண்டு பல்கலைக்கழங்களிலும் துணை வேந்தர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை துணைவேந்தராக பதவியேற்க உள்ள பி.பி.துரைசாமி சென்னை பல்கலைக்கழக ஆட்சிமன்ற உறுப்பினராக இருந்தவர். மேலும் 7வது ஊதிக்குழுவில் உறுப்பினராக இருந்தார். மேலும் இவர் 30 ஆண்டுகாலம் கல்லூரி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ள பி.செல்லதுரை நெல்லை மனோண்மனீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக பணியாற்றியவர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இரண்டு துணைவேந்தர்களும் இன்று ஆளுநரை சந்தித்து பணி நியமன ஆணைகளை பெற்றுக்கொண்டனர்.