For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆவடி அருகே பகுஜன் சமாஜ் பிரமுகர் வெட்டிப் படுகொலை... பதற்றத்தால் பலத்த பாதுகாப்பு...

Google Oneindia Tamil News

சென்னை: ஆவடியில் பகுஜன் சமாஜ் கட்சிப் பிரமுகர்வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து அங்கு பதற்றம் நிலவுகிறது.

ஆவடி நகராட்சியில் 36-வது வார்டு கவுன்சிலராக இருந்து வந்தவர் முருகன். இவர் நேற்று இரவு வழக்கம் போல் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

murder

அப்போது அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் முருகனை வழிமறித்த கும்பல் ஒன்று அவரை சரமாரியாக வெட்டிச் சாய்த்தது. இதில் சம்பவ இடத்திலேயே முருகன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

கொலை செய்யப்பட்ட முருகன் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆவார். இப்படுகொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இக்கொலை சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

முருகன் வெட்டிக்கொல்லப்பட்டதை அடுத்து ஆவடி பகுதி முழுவதும் பதற்றம் நிலவுகிறது.

English summary
Bahujan samaj party councilor murdered by a mob in Avadi Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X