For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்கா கப்பல் ஊழியர்களின் ஜாமீன் மனு: அக். 30க்கு ஒத்திவைப்பு!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தூத்துக்குடி: அமெரிக்க கப்பல் ஊழியர்கள் 35 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 30ஆம் தேதி தூத்துக்குடி நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்ததால் அமெரிக்காவை சேர்ந்த சிமேன் கார்டு என்ற கப்பல் தூத்துக்குடியில் சிறைபிடிக்கப்பட்டது.

கப்பலில் ஆயுதம் வைத்திருந்தது தொடர்பாக 35 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 10 பேர் பாளையங்கோட்டை சிறையிலும், வெளிநாட்டினர் 22 பேர் புழல் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

Bail plea hearing postponed on Oct.30

இதனிடையே, ஆயுதம் வைத்திருந்தது பற்றி 3 பேரை காவலில் எடுத்து க்யூ பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், ஜாமீன் கேட்டு 35 பேரும் தூத்துக்குடி 2வது அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 30ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

English summary
Tuticorin court postponed the hearing of the bail plea to US ship crew on October 30.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X