நிருபரின் உயிரைக் காத்த தினத்தந்தி அதிபர்!
தன் பத்திரிகையில் பணியாற்றும் மூத்த நிருபரின் இருதய அறுவைச் சிகிச்சைக்கான முழுச் செலவையும் ஏற்று உயிரைக் காப்பாற்றினார் தினத்தந்தி அதிபர் பாலசுப்பிரமணிய ஆதித்தன்.
தினத்தந்தி நாளிதழ் குழுமத்தில் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா செய்தியாளராகப் பணியாற்றி வருபவர் கங்காதரன்.
சில தினங்களுக்கு முன் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத்தில் அடைப்புகள் இருந்ததால், முழு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதை அறிந்த தினத்தந்தி அதிபர் பாலசுப்ரமணிய ஆதித்தன், கங்காதரனின் மருத்துவ செலவுத் தொகை முழுவதையும் தானே ஏற்றுக் கொள்வதாக முன் வந்து, முழு தொகையையும் செலுத்தியிருக்கிறார்.
சிகிச்சைக்குப் பிறகு ஆரோக்கியமாகவும் நல்ல முறையில் உடல் நலம் தேறியும் வருகிறார் கங்காதரன்.