For Daily Alerts
Just In
சென்னையில் வீட்டின் பால்கனி இடிந்து விழுந்ததில் தொழிலாளி பரிதாப பலி...!
சென்னையில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் பால்கனி இடிந்து விழுந்தது. இதில் கர்ணன் என்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை : சென்னை கோடம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் பால்கனி இடிந்து விழுந்த விபத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கர்ணன் என்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோடம்பாக்கம் - ட்ரஸ்ட்புரத்தில் புதிதாக வீடு ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இங்கு இன்று காலை ஏராளமான கட்டுமான தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாரதவிதமாக வீட்டின் பால்கனி இடிந்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த கர்ணன் என்ற கட்டுமான தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்கப்பதிவு செய்துள்ள போலீசார் வீட்டின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்ணனின் உடல் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
Comments
English summary
The newly built house balcony crashed in Chennai, Kodambakkam. In this mishap one of workers has died unfortunately.
Story first published: Monday, November 28, 2016, 13:37 [IST]