புரட்சித் தலைவரின் ஆட்சி அமைய.. இவர் பாஸா.. இல்லை..!
சென்னை: புரட்சித் தலைவர் என்ற பெயரைச் சொல்லிக் கொண்டு இன்னும் எத்தனை அக்கப் போர்களை இந்த தமிழகம் பார்க்கப் போகிறதோ. இதோ ஒருவர் கிளம்பியுள்ளார்.
பாஸ் என்கிற பாஸ்கரன்.. எல்லோருக்கும் டக்கென நயன்தாரா நடித்த படம்தான் நினைவுக்கு வரும்.. பார்டன்.. இது அவரைப் பற்றிய செய்தி அல்ல. இது வேற பாஸ். சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த பாஸ்கரன் பற்றிய கதை இது.
பாஸ்கரன் இப்போது ஒரு அரசியல்வாதி.. அப்ப இதற்கு முன் என்று கேட்டு எங்களை டென்ஷனாக்க கூடாது. புதிய கட்சி தொடங்குகிறார். தனது கட்சியின் பெயர், கொடியை திருத்தணியில் வைத்து வெளியிடப் போகிறாராம் பாஸ்.
30ம் தேதி காலை 10.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறும் என போஸ்டர் அடித்து நகரம் முழுவதும் ஒட்டியுள்ளனர். அதில் புரட்சித் தலைவரின் ஆட்சி அமைய என்று கூறி எம்ஜிஆர் ஸ்டைலில் போஸ் கொடுத்து அதகளம் செய்திருக்கிறார் பாஸ்.
ஏழை எளியோருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப் போவதாகவும், அதற்கு புரட்சித் தலைவரின் ரத்தத்தின் ரத்தங்கள் அலை கடலென திரண்டு வர வேண்டும் என்றும் போஸ்டரில் கேட்டுக் கொண்டுள்ளார் பாஸ்கரன்.
நீங்க கலக்குங்க பாஸு!