மனதை மயக்கும் ஊட்டி பைகாரா நீர்வீழ்ச்சி...குவியும் சுற்றுலாபயணிகள்! வீடியோ
ஊட்டி பைகாரா நீர்வீழ்ச்சியில் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகமாகக் காணப்படுகிறது. இந்த கோடை காலத்தில் மக்களின் மனதை ஈர்க்கும் வகையில் பைகாரா நீர்வீழ்ச்சி இருப்பதால் அங்கு சுற்றுலாபயணிகள் கூட்டம் அதிக
உதகை: உதகை பைகாரா அருவி நீர்வீழ்ச்சியை பார்க்க சுற்றுலா பயணிகள் திரண்டு வருகின்றனர். தொடர் மழையால் நீர்வீழ்ச்சியில் மனம் நிறையுமளவு நீர் வீழ்வதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடைகால விருந்தாக இது அமைந்துள்ளது.
தமிழகம் முழுவதும் 140 வருடங்களில் இல்லாத அளவு கடும் வறட்சி நிலவுகிறது. கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்த காரணத்தால் பார்க்குமிடமெல்லாம் வறண்டு காணப்படுகிறது.
தற்போது வெப்பசலனத்தின் காரணமாக ஆங்காங்கே தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சிவகங்கை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர். மழையின் காரணமாக வெப்பத்தின் அளவு குறைந்தது.
இந்நிலியில் ஊட்டியில் தொடர்ந்து சில தினங்களாகப் பெய்த மழையின் காரணமாக, பைகாரா நீர்வீழ்ச்சியில் நீர் திரண்டு ஓடிவருகிறது. வெயில் வாட்டி வரும் வேளையில் இந்த குளுகுளு காட்சி சுற்றுலா பயணிகளின் மனதுக்கும் கண்களுக்கும் விருந்தாக அமைந்துள்ளது. இதனால் அங்கு சுற்றுலா பயணைகள் கூட்டம் அதிகமாக உள்ளது.