Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சட்டசபையில் அத்தனை அமளி நடந்தும் அதிமுக ஏன் வாய் பொத்தி இருந்துச்சு தெரியுமா?

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சசிகலா சொல்லிதான் அமைதியாகவும், கைகட்டியும் இருந்தோம், வாய் பொத்தியும் இருந்தோம் என்று அதிமுக எம்.எல்.ஏ ஒருவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

விருதுநகர் : நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சசிகலா சொல்லிதான் அமைதியாகவும், கைகட்டியும் இருந்தோம் என்று அதிமுக எம்.எல்.ஏ எதிர்கோட்டை சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதி, கீழராஜகுலராமன் கிராமத்தில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் சாத்தூர் எம்.எல். ஏ எதிர்கோட்டை சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார்.

Because of sasikala we kept silence in assembly says ADMK MLA

கூட்டத்தில் பேசிய எதிர்கோட்டை சுப்பிரமணியன் , நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுக வன்முறையில் ஈடுபட முயலும் என்று சசிகலா முன்கூட்டியே எங்களிடம் கூறினார். ஆனால் நாம் அதை பொருட்படுத்தாமல் கைக்கட்டி , வாய்பொத்தி, அமைதியாக இருந்து நமது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்என்று சசிகலா எங்களிடம் தெரிவித்தார்.

திமுகவின் ஸ்டாலினும், துரைமுருகனும் திமுக எம்.எல்.ஏக்களை தூண்டிவிட்டு வன்முறையில் ஈடுபட்டபோதும் கூட, சசிகலா கூறிய ஒரே காரணத்திற்காக மட்டுமே நாங்கள் 3 மணி நேரம் அமைதியாக கைக்கட்டி, வாய்பொத்தி சட்டசபையில் அமர்ந்து இருந்தோம்.

இதனால் தான் தீய சக்திகளிடம் இருந்து தமிழகத்தை காப்பாத்திட்டோம். மேலும் சசிகலா , தொகுதிகளில் உள்ள மக்கள் குறைகளை கேட்டு அதை பூர்த்தி செய்யவேண்டும் என்று எம்.எல்.ஏக்களை அறிவுறுத்தியிருக்கிறார். அதன்படி நாங்களும் தொகுதி மக்களின் தேவைகள் கேட்டறிந்துவருகிறோம் என்று எதிர்கோட்டை சுப்பிரமணியன் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+