சட்டசபையில் அத்தனை அமளி நடந்தும் அதிமுக ஏன் வாய் பொத்தி இருந்துச்சு தெரியுமா?
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சசிகலா சொல்லிதான் அமைதியாகவும், கைகட்டியும் இருந்தோம், வாய் பொத்தியும் இருந்தோம் என்று அதிமுக எம்.எல்.ஏ ஒருவர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் : நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சசிகலா சொல்லிதான் அமைதியாகவும், கைகட்டியும் இருந்தோம் என்று அதிமுக எம்.எல்.ஏ எதிர்கோட்டை சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதி, கீழராஜகுலராமன் கிராமத்தில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் சாத்தூர் எம்.எல். ஏ எதிர்கோட்டை சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் பேசிய எதிர்கோட்டை சுப்பிரமணியன் , நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுக வன்முறையில் ஈடுபட முயலும் என்று சசிகலா முன்கூட்டியே எங்களிடம் கூறினார். ஆனால் நாம் அதை பொருட்படுத்தாமல் கைக்கட்டி , வாய்பொத்தி, அமைதியாக இருந்து நமது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்என்று சசிகலா எங்களிடம் தெரிவித்தார்.
திமுகவின் ஸ்டாலினும், துரைமுருகனும் திமுக எம்.எல்.ஏக்களை தூண்டிவிட்டு வன்முறையில் ஈடுபட்டபோதும் கூட, சசிகலா கூறிய ஒரே காரணத்திற்காக மட்டுமே நாங்கள் 3 மணி நேரம் அமைதியாக கைக்கட்டி, வாய்பொத்தி சட்டசபையில் அமர்ந்து இருந்தோம்.
இதனால் தான் தீய சக்திகளிடம் இருந்து தமிழகத்தை காப்பாத்திட்டோம். மேலும் சசிகலா , தொகுதிகளில் உள்ள மக்கள் குறைகளை கேட்டு அதை பூர்த்தி செய்யவேண்டும் என்று எம்.எல்.ஏக்களை அறிவுறுத்தியிருக்கிறார். அதன்படி நாங்களும் தொகுதி மக்களின் தேவைகள் கேட்டறிந்துவருகிறோம் என்று எதிர்கோட்டை சுப்பிரமணியன் கூறினார்.