சட்டசபையில் அத்தனை அமளி நடந்தும் அதிமுக ஏன் வாய் பொத்தி இருந்துச்சு தெரியுமா?
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சசிகலா சொல்லிதான் அமைதியாகவும், கைகட்டியும் இருந்தோம், வாய் பொத்தியும் இருந்தோம் என்று அதிமுக எம்.எல்.ஏ ஒருவர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் : நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சசிகலா சொல்லிதான் அமைதியாகவும், கைகட்டியும் இருந்தோம் என்று அதிமுக எம்.எல்.ஏ எதிர்கோட்டை சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதி, கீழராஜகுலராமன் கிராமத்தில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் சாத்தூர் எம்.எல். ஏ எதிர்கோட்டை சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் பேசிய எதிர்கோட்டை சுப்பிரமணியன் , நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுக வன்முறையில் ஈடுபட முயலும் என்று சசிகலா முன்கூட்டியே எங்களிடம் கூறினார். ஆனால் நாம் அதை பொருட்படுத்தாமல் கைக்கட்டி , வாய்பொத்தி, அமைதியாக இருந்து நமது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்என்று சசிகலா எங்களிடம் தெரிவித்தார்.
திமுகவின் ஸ்டாலினும், துரைமுருகனும் திமுக எம்.எல்.ஏக்களை தூண்டிவிட்டு வன்முறையில் ஈடுபட்டபோதும் கூட, சசிகலா கூறிய ஒரே காரணத்திற்காக மட்டுமே நாங்கள் 3 மணி நேரம் அமைதியாக கைக்கட்டி, வாய்பொத்தி சட்டசபையில் அமர்ந்து இருந்தோம்.
இதனால் தான் தீய சக்திகளிடம் இருந்து தமிழகத்தை காப்பாத்திட்டோம். மேலும் சசிகலா , தொகுதிகளில் உள்ள மக்கள் குறைகளை கேட்டு அதை பூர்த்தி செய்யவேண்டும் என்று எம்.எல்.ஏக்களை அறிவுறுத்தியிருக்கிறார். அதன்படி நாங்களும் தொகுதி மக்களின் தேவைகள் கேட்டறிந்துவருகிறோம் என்று எதிர்கோட்டை சுப்பிரமணியன் கூறினார்.
-
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா! -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
அவிநாசி தொகுதி: பாஜக சுருக்குவலையில் எடப்பாடி..இப்படி பண்ணிருக்க கூடாது..குமுறும் தனபால் ஆதரவாளர்கள் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள்












Click it and Unblock the Notifications