கடலூர் போலீஸ் ஸ்டேஷன் முன்பு தலையை வெட்டி வீசிய கொலையாளிகள் - பரபரப்பு வீடியோ
கடலூர் அருகே இளைஞரின் தலையை துண்டித்து காவல் நிலையம் முன்பு வீசிசென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர்: கடலூர் மாவட்டம், ரெட்டிசாவடியில் இளைஞரின் தலையை துண்டித்து காவல் நிலையத்திற்குள் வீசிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், ரெட்டிசாவடியில் இளைஞரின் தலை துண்டித்து காவல்நிலையம் முன்பு வீசப்பட்டுள்ளது. இது அங்கு வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவானது. தலையை பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இருவர் போலீஸ் ஸ்டேசனுக்குள் வீசி சென்ற காட்சி பதிவாகியிருந்து. இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.
கொலை செய்யப்பட்டவரின் உடல் புதுச்சேரி மாநிலம் பாகூரில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்டர் 25 வயது மதிக்கத்தக்கவர் என தெரிய வந்துள்ளது. சி.சி.டி.வியில் பதிவான காட்சிகளை வைத்து தலையை வீசி சென்ற கொலையாளிகள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் விசாரணையில் கொலை செய்யப்பட்டது புதுச்சேரி மாநிலம் பாகூரைச் சேர்ந்த சுவேதன் (17) என்பதும் அவர் ஒரு கொலை வழக்கில் தற்போது ஜாமீனில் வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் கடலூர், புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.