நம்மாளுங்களுக்கு இந்தக் "கிசும்பு" மட்டும் போகவே இல்லை பாருங்க!
சென்னை: ஜல்லிக்கட்டுக்குத் தடையால் ஊரே அல்லோகல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனாலும் ரணகளத்திலேயும் கிளுகிளுப்பு என்பது போல ஜல்லிக்கட்டை வைத்து சிலர் காமெடி செய்யத் தவறவில்லை.
அதேசமயம், ஓவராக கிண்டாமல் பட்டும் படாமல் ஜல்லிக்கட்டை இப்படி நடத்தலாம், அப்படி நடத்தலாம் என்று ஐடியாக்களை ஆங்காங்கே அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதில் ஒன்றுதான் இது.. பேசாமல் இப்படி நடத்திட்டா பிரச்சினை வராதே என்று.. நல்ல ரோசனைதான்! இதைப் பார்த்தா "பீட்டா"காரனே கன்பீஸ் ஆயிருவான்...!
இந்த மாதிரி ஜல்லிக்கட்டு நடத்தினா ஒரு பிரச்சனையும் வராது.#ஜல்லி_சிங்கர் சீசன் 1.2.3... அப்படின்னு போய்கிட்டே இருக்கும்
Posted by Kannan Ramajayam on Saturday, January 9, 2016
ஆனா எனக்கு ஒரே ஒரு டவுட்தான் பாஸ்.. இதுல பேச்சி பேச்சின்னு ராமாஜன் கூப்பிறாரே.. காளை மாட்டுக்கு எப்படி பேச்சின்னு பேரு வப்பாங்கே..? ஒரு வேளை பேச்சிமுத்தா இருக்குமோ...??... இருந்தாலும் இருக்கும்!