கர்நாடகா மாஜி சிஎம் தேவராஜ் அர்ஸின் சகோதரருடன் ஜெ.தாயார் சந்தியாவுக்கு தொடர்பு இருந்தது-லலிதா ஷாக்
கர்நாடகா மாஜி சிஎம் தேவராஜ் அர்ஸின் சகோதரருடன் ஜெ.தாயார் சந்தியாவுக்கு தொடர்பு இருந்தது என பெங்களூரு லலிதா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
சென்னை: கர்நாடகா முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸின் சகோதரரும் திரைப்பட நடிகரும் இயக்குநருமான கெம்புராஜ் அர்ஜ்ஸுக்கும் ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவுக்கும் தொடர்பு இருந்தது என ஜெயலலிதாவின் அத்தை மகள் பெங்களூரு லலிதா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் அத்தை மகளான லலிதா சன் நியூஸ் டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்ததாவது:
ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமனை அவரது தாயார் சந்தியா விஷம் வைத்து கொன்றுவிட்டதாக கூறுவார்கள். சாப்பாட்டில் விஷப் பொடியை கலந்ததாக சொல்வார்கள்.
ஜெயலலிதாவின் அண்ணன் என கூறும் வாசுதேவன் கூறுவதைப் போல ஜெயராமன், சந்தியாவை முறைப்படி திருமணம் செய்யாமல் இல்லை. 7 நாட்கள் இருவருக்கும் முறைப்படியே திருமணம் நடந்தது. இருந்தபோதும் சந்தியாதான் விஷம் வைத்து கொன்றதாக பெரியவர்கள் கூறுவார்கள்.
பின்னர் கன்னட திரைப்பட இயக்குநர் கெம்புராஜ் அர்ஸுடன் சந்தியா தொடர்பில் இருந்தார் என்பார்கள். அந்த கெம்புராஜ்தான் தேவராஜ் அர்ஸின் தம்பியாம். சந்தியாவுக்கும் கெம்புராஜ் அர்ஸுக்கும் பிறந்ததுதான் சைலஜா எனவும் சொல்வார்கள்.
இவ்வாறு சன் நியூஸ் டிவி சேனல் பேட்டியில் லலிதா தெரிவித்துள்ளார்.