BREAKING NEWS: பாரத் பந்த்.. டெல்லி டூ கன்னியாகுமரி.. லட்சக்கணக்கானோர் போராட்டம்
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, இந்திய ரூபாய் மதிப்பு குறைவு உள்ளிட்ட பொதுமக்களை பாதிக்கும் விவகாரங்களுக்கு கண்டனம் தெரிவித்து, நாடு முழுக்க இன்று திங்கள்கிழமை முழு அடைப்பு நடக்கிறது. டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை பற்றி மோடி பேசவில்லை -ராகுல்
விவசாயிகளின் கஷ்டம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை -ராகுல்
பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை குறித்து வாய் திறக்கவில்லை -ராகுல்
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு அதலபாதாளத்தில் உள்ளது -ராகுல்
Aaj poora vipaksh yahan ek saath baitha hai. Hum sab mil kar ek saath, BJP ko hatane ka kaam karenge: Rahul Gandhi during #BharathBandh protests in Delhi pic.twitter.com/CIbjNtcAs9
— ANI (@ANI) September 10, 2018
சோனியா, மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு
ஆம் ஆத்மி கட்சியினரும் பேரணியில் பங்கேற்பு
தற்போது ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடக்கிறது
ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் தொடங்கி ஜந்தர் மந்தர் வரை பேரணி
இடதுசாரி அமைப்புகளும் பேரணியில் கலந்து கொண்டுள்ளது
ராஜ்காட்டில் இருந்து ராம்லீலா மைதானம் வரை ஆயிரக்கணக்கானோர் நடைபயணம்
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி பேரணியில் முழக்கம்
இந்தியா முழுக்க தீவிரமடைகிறது கண்டன ஆர்ப்பாட்டம்
Delhi: Congress President Rahul Gandhi and opposition party leaders march from Rajghat towards Ramlila Maidan, to protest against fuel price hike. #BharatBandh pic.twitter.com/X7DQcVRgIA
— ANI (@ANI) September 10, 2018
காங்கிரஸ் அழைப்புவிடுத்துள்ள பந்த்துக்கு நாடு முழுக்க ஆதரவு
பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்க வாய்ப்பு
தமிழகத்தில் ஆட்டோ, மணல் லாரிகள் இயங்காது
தமிழகத்தில் பாரத் பந்த்துக்கு திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு
காலை 9 மணிக்கு பந்த் தொடங்கி மதியம் 3 மணிவரை நடைபெற உள்ளது