பெட்ரோல் விலை உயர்வு.. சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்.. போலீஸ் குவிப்பு
பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிராக தமிழகத்திலும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
Recommended Video
சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிராக தமிழகத்திலும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிராக தமிழகத்திலும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. திமுக, காங்கிரஸ் சார்பில் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.அதேபோல் இன்று நாடு முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. தமிழகத்தில் போராட்டத்திற்கு திமுக உள்ளிட்ட 10க்கும் அதிகமான கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.
அதேபோல் இன்று தமிழகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும்.
முழு அடைப்பை தொடர்ந்து சென்னையில் காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ள நிலையில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. 20 ஆயிரத்திற்கும் அதிகமான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 20க்கும் அதிகமான கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.மெரினா, அண்ணா சாலை உள்ளிட்ட இடங்களில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. காலை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரே அனைத்துக் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.