என் மயில் இல்லை என்பதை என்னால் நம்ப முடியல... பாரதிராஜா உருக்கம்
என் மயில் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை என இயக்குநர் பாரதி ராஜா உருக்கமாக தெரிவித்தார்.
Recommended Video
சென்னை: என் மயில் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை என இயக்குநர் பாரதிராஜா அதிர்ச்சிகரமாக கூறியுள்ளார்.
துபாயில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில் ஸ்ரீதேவிக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிர் பிரிந்தது. உடல்நலத்தில் அக்கறை கொண்டவரான ஸ்ரீதேவி இறந்தது அதுவும் மாரடைப்பில் இறந்தது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஸ்ரீதேவி இன்று நம்மிடம் இல்லை
இதுகுறித்து இயக்குநர் பாரதிராஜா கூறுகையில் , இந்திய சினிமாவுக்கு ஸ்ரீதேவியின் மறைவு இழப்பாகும். 55 வயதிலும் பிரமாண்டமாக நடித்த ஸ்ரீதேவி இன்று நம்மிடம் இல்லை.
9 மொழிகளை பேசும் திறன்
ஸ்ரீதேவியை இந்தியில் அறிமுகம் செய்தது நான்தான். நடிப்பை என்னிடம் கற்றுக் கொண்டதாக ஸ்ரீதேவி கூறியிருந்தார். எந்த பல்கலைக்கழகத்திலும் படிக்காத பெண், 9 மொழிகளை பேசும் திறனைப் பெற்றவர். இது கடவுள் கொடுத்த பொக்கிஷம்.
50 ஆண்டுகள் கொடி கட்டி
கலை உலகின் ராணியாக திகழ்ந்தவர். என் மயில் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. கலையுலகில் 40, 50 ஆண்டுகாலமாக கொடி கட்டி பறந்தார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் இன்று வரை தனது கிரீடத்தை இறக்கவே இல்லை.
இன்று நம்மிடம் இல்லை
இறக்கும் வயதா என்று தோன்றுகிறது. 50 வயதிலும் பிரம்மாண்டமாக நடித்து தனது ஆற்றலை நிரூபித்த ஸ்ரீதேவி இன்று நம்மிடையே இல்லை என்கிறபோது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது.
மயில் கதாபாத்திரம்
16 வயதினிலே படத்துக்கு 16 வயதில் ஒரு நடிகையை தேடிக் கொண்டிருந்தேன். அப்போது கிடைத்தவர்தான் ஸ்ரீதேவி.அந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த கனவு கதாபாத்திரமான மயில் கதாபாத்திரத்தை முழுமைப்படுத்தியவர். மயிலின் பெயரை அவரது பிள்ளைகள் காப்பாற்றுவார்கள் என நம்புகிறேன்.
புது படத்தில் நடிக்க வைப்பதாக இருந்தேன்
கதையே கேட்காமல் சிகப்பு ரோஜாக்கள் படத்தை நடிக்க ஒப்புக் கொண்டார். இப்போது என் மயிலு இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஸ்ரீதேவியை வைத்து அவர் வயதுக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதாக இருந்தேன். போனி கபூருக்கும் அவரது இரு குழந்தைகளுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் என்றார் பாரதிராஜா.