பாரதிராஜாதான் அப்பவே சொன்னாரே.. கேட்டீங்களா.. இப்ப கமல் கோபப்பட்டுட்டாரு பாருங்க!
சென்னை: நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் உங்களால் தாங்க முடியாது என்று இயக்குநர் பாரதிராஜா முன்பே கூறியுள்ளார்.
தைரியமிருந்தால் கமல் அரசியலுக்கு வந்து தன் கருத்தை சொல்லட்டும், அரசியலுக்கு வருவதற்கு கமலுக்கு தைரியமில்லை என்றும் ஜெயலலிதா இருக்கும் வரை வாயை பொத்தி கொண்டு இருந்த கமல்ஹாசன் இன்று ஜெயலலிதா மறைந்த பிறகு மட்டும் வாயை திறப்பது வேடிக்கையாக இருக்கிறது என்றும் நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.
அதேபோல், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறுகையில், தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வர கனவு காணலாம். ஆனால் கமல் ஒரு முதுகெலும்பில்லாத கோழை. அவர் முடிவெடுத்தாலும் முதல்வராக முடியாது என தெரிவித்திருந்தார்.
இதற்கு எல்லாம் பதிலடி கொடுத்த கமல்ஹாசன், இந்தி திணிப்பு பற்றி தான் எப்போது பேசினேனோ அப்போதே அரசியலுக்கு வந்து விட்டேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நேற்று நடிகர் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் போட்ட டிவிட் அவர் அரசியலுக்கு வருவதை உணர்த்துவதாக இருந்தது.
இந்நிலையில் நடிகர் கமல் இன்று வெளியிட்டு அறிக்கையின் மூலம் அவர் தற்போது உள்ள சூழலில் நேரடி அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்ற மில்லியன் டாலர் கேள்வியை எழுப்பியுள்ளது. இதற்கான விடையை பாரதிராஜா முன்பே ஒரு முறை கூறியுள்ளார்.
(கமல் அரசியலுக்கு வந்தால் உங்களால் தாங்க முடியாது!- பாரதிராஜா)
அப்படி கமல் அரசியலுக்கு வந்தா முழுசா எல்லாத்தையும் கத்துக்கிட்டுதான் வருவார் என்றும் அவர் சீரியஸாகக் கூறியுள்ளார்.