For Daily Alerts
Just In
சென்னை, மயிலாப்பூரில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பரபரப்பு
சென்னை: மயிலாப்பூர் பகுதியில் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை, மயிலாப்பூர், பிஎஸ் சிவசாமி சாலையிலுள்ள, விவேகானந்தா கல்லூரி அருகே நேற்று இரவு சாலையில் திடீர் விரிசல் ஏற்பட்டது.
இந்த விரிசல் இன்று பெரிதாகி 10 அடி அளவுக்கு சிறிய பள்ளம் உருவானது. பள்ளம் உருவானதை அடுத்து மரக்கிளைகள் கொண்டும், செடிகளை கொண்டும் அந்த பகுதி மக்கள் சாலை பள்ளத்தை மூடியுள்ளனர்.
சாலை பள்ளத்திற்கு காரணம் மழைநீர் வடிகால் வழித்தடம்தான் என்பதே அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு. அப்பகுதியில் அடிக்கடி பள்ளம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த பிரச்சினையை நிரந்தரமாக சரி செய்வதற்கான நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்பது மக்கள் கோரிக்கையாக உள்ளது.
Comments
English summary
In the Mylapore area of Chennai there is a sudden big hole appears in the road. The local people demand that Chennai Corporation should take steps to permanently correct this problem.
Story first published: Wednesday, January 31, 2018, 17:29 [IST]