சென்னையில் 7 இளைஞர்கள் பைக் ரேஸ்... ஸ்பென்சர் பிளாசா அருகே சாலைத் தடுப்பில் மோதி ஒருவர் பலி
சென்னையில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டபோது ஸ்பென்சர் பிளாசா அருகே சாலைத்தடுப்பில் பைக் மோதியதால் ஒருவர் பலியாகிவிட்டார்.
சென்னை: சென்னையில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டபோது ஸ்பென்சர் பிளாசா அருகே சாலைத்தடுப்பில் பைக் மோதியதில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
கிழக்கு கடற்கரை சாலை, புதுவை சாலை போன்ற ஆள் அரவமற்ற பகுதிகளில் நடைபெற்று வந்த பைக் ரேஸ் தற்போது சென்னையில் அதுவும் நெரிசலான இடங்களிலும் நடக்க தொடங்கிவிட்டது.
அண்மையில் முதல்வர் வீட்டருக்கே இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டதாகவும் வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சமாக இருப்பதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில் 7 இளைஞர்கள் கொண்ட கும்பல நெரிசல் மிகுந்த பிரதான சாலையில் பைக் ரேஸ் சென்றனர்.
அப்போது அண்ணா சாலையில் அதிவேகமாக அங்கும் இங்கும் சென்றுள்ளனர். ஸ்பென்சர் பிளாசா அருகே உள்ள சென்டர் மீடியனில் இரு பைக்குகள் மோதின. அப்போது யோகேஷ்வரன் மற்றும் விக்ரமன் ஆகிய இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டனர்.
இதையடுத்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் விக்ரமன் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.