வறண்டு போன நெல்லை கூந்தன்குளம்.. திசை மாறிய பறவைகள்
நெல்லையில் கூந்தன்குளம் பறவை சரணாலயத்தில் பறவைகள் தண்ணீர் இல்லாததால் வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்தை சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
நெல்லை: நெல்லையில் கூந்தன்குளம் பறவை சரணாலயத்தில் பறவைகள் தண்ணீர் இல்லாததால் வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்தை சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் உலக நாடுகளின் பறவைகளுக்கு புகலிடமாக இருந்து வருகிறது. வனத்துறை கட்டுபாட்டில் இருக்கும் இந்த பகுதி தற்போது சுற்றுலா மையமாக மாறியுள்ளது.
இங்கு டிசம்பர் தொடங்கி ஆகஸ்ட் வரையிலான காலங்களில் பறவைகள் வசந்த காலமாக இருந்து வருகிறது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் மழை பெய்து இந்த குளங்களில் நீர்வரத்து அதிகரிக்கும். அப்போது அங்கு பறவைகள் கூடு கட்டி குஞ்சி பொறிக்கின்றன.
பின்னர் அவை பறக்கும் பருவம் வந்ததும் தங்கள் தாய் நாடுகளுக்கு திரும்புகின்றன. பறவைகளுக்கு தேவையான அமைதியான, வசதியான சூழல் இங்கு இருப்பதால் இந்த இடத்தை அவைகள் விரும்புவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக சைபீரியா, மங்கோலியா, ஜெர்மனி, பிலிப்லைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து சிவப்பு மூக்கு ஆள்காட்டி, நாமகோழி, கண்கிலேடி உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் வந்து செல்வதாக பொது மக்கள் கூறுகின்றனர்.
தற்போது இந்த குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து செல்லப்படுவதாலும், வெயில் கொளுத்த துவங்கியிருப்பதாலும் குளத்தில் நீர் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் பறவைகள் வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். விரைவில் குளத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.